close
Choose your channels

ஏஜிஎஸ் நிறுவனத்தின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? இயக்குனர் இவரா?

Monday, October 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் நடித்த ’பிரின்ஸ்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று பிரமாண்டமாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது ’மாவீரன்’ என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார் என்பதும், மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் நாயகியாக அதிதி ஷங்கர் நடித்து வருகிறார் என்பதும், இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஏற்கனவே கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள ’அயலான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது என்பதும் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க இருப்பதாகவும் இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகிய இருவரும் இணைந்து இந்த படத்திற்கு இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.