close
Choose your channels

'கபாலி'யின் ரகசியத்தை உடைத்த செளந்தர்யா ரஜினிகாந்த்

Sunday, June 19, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் இன்று உலக அளவில் பேசப்பட்டாலும் இந்த படம் தொடங்குவது குறித்த பேச்சுவார்த்தை தற்செயலாக நடந்தது என்று ரஜினியின் மகளும் 'கோச்சடையான்' இயக்குனருமான செளந்தர்யா ரஜினிகாந்த் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
'கோவா' படத்தில் வெங்கட்பிரபுவின் உதவியாளராக பணிபுரிந்து கொண்டிருந்தபோதே தனக்கு ரஞ்சித்தை தெரியும் என்றும் ரஞ்சித் இயக்கிய முதல்படமான 'அட்டக்கத்தி' படத்தை முதலில் தானே தயாரிக்க இருந்ததாகவும் ஆனால் எதிர்பாராத காரணத்தினால் அது நடைபெறவில்லை என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் அப்பா தன்னிடம் 'மெட்ராஸ்' படம் நன்றாக இருந்ததாக கூறியதாகவும், இதை மனதில் வைத்து ஒருநாள் தற்செயலாக ரஞ்சித்திடம் பேசிக்கொண்டிருந்தபோது 'அப்பாவுக்கு ஒரு நல்ல கதையிருந்தால் சொல்லுங்கள் என்று நான் சொன்னதும் இன்ப அதிர்ச்சியில் உறைந்துவிட்ட ரஞ்சித் ஒருசில நாட்களுக்கு பின்னர் 'மலேசியா டான்' கதையை கூறியதாகவும், அந்த கதையை நான் அப்பாவிடம் கூறியதும் அப்பாவுக்கு அந்த கதை பிடித்துவிட்டதால் இன்று 'கபாலி'யாக உருவாகியுள்ளது என்றும் கூறியுள்ளார்.
'கபாலி' படத்தின் இரண்டு டீசர்கள் வெளியாகியுள்ள நிலையில் நிச்சயம் இந்த படம் 'பாட்ஷா'வுக்கு இணையாக இருக்கும் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.