close
Choose your channels

பாக்கத்தானே போற இந்த காளியோட ஆட்டத்த: 'பேட்ட' சிங்கிள் டிராக் விமர்சனம்

Monday, December 3, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படத்தின் அட்டகாசமாக அனிருத் இசையமைத்த 'மரண மாஸ் குத்து பாடல் சற்றுமுன் வெளியாகி வைரலாகி வருகிறது.

பாடல் தொடங்குவதற்கு முன் ரஜினியின் டிரேட் மார்க் சிரிப்புடன் ''பாக்கத்தானே போற இந்த காளியோட ஆட்டத்த' என்ற வசனத்துடன் பாடல் தொடங்குகிறது. 'தட்லாட்டம் தாங்க' தர்லாங்க சாங்க' என்று 'சிம்டாங்காரன்' பாணியில் இந்த பாடல் புரியாத வரிகளில் ஆரம்பித்தாலும் அடுத்த வரியே 'உள்ளார வந்தான்னா பொல்லாத வேங்க' என்ற புரியும் வரிகளுடன் பாடல் தொடர்கிறது.

'கெத்தா நடந்து வர்றான் கேட்டையெல்லாம் கடந்து வர்றான், ஸ்லீவ்வ சுருட்டி வர்றான் காலரத்தான் பெரட்டி வர்றான்' போன்ற வரிகள் ரஜினி ரசிகர்களுக்கான விருந்து

எஸ்பிபி குரலில் பாடல் ஆரம்பிக்கும்போது வரிகள் தெளிவாக உள்ளது. குறிப்பாக 'எவண்டா மேல, எவண்டா கீழே எல்லா உயிரையும் ஒண்ணாக பாரு என்ற வரியும், முடிஞ்ச வரைக்கும் அன்பு சேரு, தலையில் ஏத்தி வச்சு கொண்டாடு ஊரு' என்ற வரிகளில் ரஜினி அடிக்கடி பல மேடையில் சொன்ன கருத்து எளிமையாக கூறப்பட்டுள்ளது.

நியாயம் இருந்து எதிர்த்து வர்றியா உன்னை மதிப்பேன் அது என் பழக்கம், கால இழுத்து உயர நினைச்சா கெட்ட பய சார் இடியாய் இடிக்கும் என்ற வரி ரஜினியின் 'கெட்ட பய சார் இந்த காளி' என்ற வசனத்தை நினைவுபடுத்துகிறது.

மொத்தத்தில் மரணமாஸ் தலைவர் குத்து பாடல் ரசிகர்களின் அமோக ஆதரவை பெறும் என்பது உறுதி

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.