close
Choose your channels

சென்னை திரும்பிவிட்டார் ரஜினிகாந்த்: 'தலைவர் 170' படப்பிடிப்பு எப்போது?

Tuesday, August 22, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவர் சமீபத்தில் இமயமலைக்கு ஆன்மீக பயணம் சென்றார் என்பதும் அந்த பயணத்தை முடித்துவிட்டு நேற்று இரவு சென்னை திரும்பினார் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் ’ஜெயிலர்’ திரைப்படத்தை அடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ’லால் சலாம்’ திரைப்படத்திலும் ரஜினிகாந்த் நடித்து முடித்துவிட்டார்

இந்த நிலையில் அடுத்த கட்டமாக ’தலைவர் 170’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் ரஜினிகாந்த் சென்னை திரும்பி விட்ட நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி ’தலைவர் 170’ படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 19ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன

’ஜெய்பீம்’ ஞானவேல் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தில் ஏற்கனவே அமிதாப்பச்சன் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவிருக்கும் நிலையில் பகத் பாசில் இந்த படத்தில் வில்லனாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் ரஜினிகாந்த் இந்த படத்தில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

லைகா தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகும் ‘தலைவர் 170’ படமும் ’ஜெயிலர்’ போலவே சூப்பர் ஹிட்டாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.