close
Choose your channels

சுரேஷ் காமாட்சியின் அடுத்த படம்: இன்று முதல் படப்பிடிப்பு!

Monday, October 4, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான சிம்புவின் ’மாநாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் கடந்த சில நாள்களாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அவருடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுரேஷ் காமாட்சியின் அடுத்த படத்தை பிரபல இயக்குனர் ராம் இயக்கவுள்ளார் என்பதும் இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி மற்றும் அஞ்சலி நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் சூரி நடிக்கிறார்.

தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளில் இந்த படம் உருவாகி வருவதாகவும் இன்று முதல் ராமேஸ்வரத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளதாகவும் நிவின்பாலி, அஞ்சலி, சூரி உள்பட படக்குழுவினர் அனைவரும் இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.