close
Choose your channels

சூர்யாவின் 38வது படத்தின் பணியும் ஆரம்பம்

Saturday, July 28, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடித்து வரும் 36வது படமான 'என்.ஜி.கே' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளது. ஒருசிறு உடல்நல குறைவுக்கு பின்னர் மீண்டும் செல்வராகவன் படப்பிடிப்பை விரைவில் தொடங்கவுள்ளார்.

இந்த நிலையில் சூர்யாவின் 37வது படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பையும் இந்த படத்தின் இயக்குனர் கே.வி.ஆனந்த் முடித்துவிட்டார். இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த தகவல் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சூர்யாவின் 38வது படத்தை 'இறுதிச்சுற்று' இயக்குனர் சுதா இயக்கவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்தது. தற்போது இந்த படத்தின் பாடல்கள் கம்போஸிங் பணி தொடங்கிவிட்டது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தின் பாடல்களை 'மெர்சல்', 'சர்கார்' படங்களுக்கு பாடல்கள் எழுதும் பாடலாசிரியர் விவேக் பாடல்களை எழுதுகிறார். இந்த தகவலை அவர் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்து சூர்யா, இயக்குனர் சுதா ஆகியோர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

நிஜ சம்பவம் ஒன்றை அடிப்படையாக வைத்து உருவாகவுள்ள 'சூர்யா 38' திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் 2019ஆம் ஆண்டு தொடங்கவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.