close
Choose your channels

இரவில் கண்டிப்பாக இதை செய்யுங்கள்: நிவாரண பணியில் இருக்கும் ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை..!

Saturday, December 9, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வெள்ள நிவாரண பணியில் இருக்கும் ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா அறிவுரை கூறிய ஆடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சென்னையில் பெய்த கனமழை மற்றும் பெரு வெள்ளம் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து திரையுலக பிரபலங்களின் ரசிகர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து நிவாரண பணிகளை செய்து வருகின்றனர். குறிப்பாக அத்தியாவசிய பொருட்களான தண்ணீர், பால் மற்றும் உணவு பொருட்களை வெள்ளத்தில் சிக்கி உள்ள மக்களுக்கு கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் சூர்யா தனது ரசிகர்களுக்கு இது குறித்து அறிவுரை கூறியுள்ளார். வெள்ள நிவாரண பணியில் இருக்கும் ரசிகர்கள் நிறைய பேர் தண்ணீரில் இருக்கிறார்கள். பணிகள் முடிந்ததும் காலில் மஞ்சள் பொடி, தேங்காய் எண்ணெய் பூசி சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்' என்று கூறியுள்ளார்.

நிவாரண பணியில் இருக்கும் தனது ரசிகர்கள் மீது இருக்கும் அக்கறை காரணமாக சூர்யா இந்த ஆடியோவை வெளியிட்டதாக தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.