close
Choose your channels

டென்மார்க் தீவில் ஜோதிகாவுடன் சூர்யா.. வைரல் புகைப்படம்..!

Sunday, June 4, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

டென்மார்க் நாட்டில் உள்ள தீவில் சூர்யா மற்றும் ஜோதிகா இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்களில் ஒருவரான சூர்யா தற்போது ’கங்குவா’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு தேவையான செட் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சூர்யா மற்றும் ஜோதியாக இருவரும் டென்மார்க் நாட்டில் உள்ள ஃபரோ என்ற தீவில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. அந்த தீவில் உள்ள ஒரு ரசிகருடன் சூர்யா ஜோதிகா இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.

டென்மார்க் சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு சூர்யா சென்னை திரும்பியதும் ’கங்குவா’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா தற்போது ’கங்குவா’ படத்தின் சரித்திர கதையம்சம் கொண்ட காட்சிகளின் படப்பிடிப்பில் நடிக்க இருப்பதால் அதற்கு அவர் தயாராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் 10க்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் நடித்து வரும் சூர்யா ஜோடியாக திஷா பதானி நடித்து வருகிறார். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவில் நிஷாத் யூசுப் படத்தொகுப்பில் மதன் கார்க்கி வசனத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.