close
Choose your channels

சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' முக்கிய அப்டேட் தந்த இயக்குனர் பாண்டிராஜ்!

Wednesday, November 10, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடித்த ’எதற்கும் துணிந்தவன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து விட்டதாக இந்த படத்தின் இயக்குனர் பாண்டிராஜ் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்

’எதற்கும் துணிந்தவன்’ படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்ததாகவும், இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் மற்றும் எங்கள் ஹீரோ சூர்யா மற்றும் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு ஆகியோருக்கும் எனது குழுவினர்கள் கொடுத்த முழு ஒத்துழைப்புக்கும் மிகவும் நன்றி என்றும் ’எதற்கும் துணிந்தவன்’ படத்தின் அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்றும் இயக்குனர் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்

சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்எஸ் பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், தேவதர்ஷினி உள்பட பலர் நடித்த இந்த திரைப்படத்திற்கு டி இமான் இசையமைத்து வருகிறார். இந்த படம் வரும் டிசம்பர் அல்லது ஜனவரியில் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.