close
Choose your channels

நடிகர் எஸ்.வி.சேகருக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம்.. என்ன வழக்கு? தீர்ப்பின் முழு விவரங்கள்..!

Monday, February 19, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பெண் பத்திரிகையாளர் குறித்த சர்ச்சைக்குரிய கருத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்ததாக நடிகர் எஸ்வி சேகர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில் இந்த வழக்கில் அவருக்கு ஒரு மாத சிறை தண்டனை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர் குறித்து சர்ச்சை கருத்து ஒன்றை தனது முகநூல் பக்கத்தில் நடிகர் எஸ்வி சேகர் பதிவு செய்த நிலையில் அந்த கருத்துக்கு ஆவேசமான பத்திரிகையாளர்கள் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த நிலையில் இந்த வழக்கு கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்தது. இந்த நிலையில் இன்று அதிரடியாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பில் எஸ்வி சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை என்றும் 15 ஆயிரம் அபராதம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அபராத தொகையை எஸ்வி சேகர் செலுத்தி உள்ளதாகவும் மேலும் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் அவரது தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து மேல்முறையீடு செய்ய வசதியாக எஎஸ் வி சேகர் மீதான தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.