close
Choose your channels

பிரதமராகும் தமிழ் நடிகை.. இணையத்தில் வைரல் ஆகும் தகவல்..!

Thursday, July 6, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் நடிகை ஒருவர் பிரதமராக இருப்பதாக இணையத்தில் மிக வேகமாக ஒரு தகவல் பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரை உலகில் பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரஞ்சிதா. இவர் இந்தியாவால் தேடப்பட்டு வரும் சாமியார் நித்தியானந்தாவின் கைலாசா என்ற நாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

கைலாசா நாட்டிற்கு பாஸ்போர்ட், நாணயம், தனிக்கோடி உள்ளிட்டவற்றை இணையதளங்கள் மூலம் நித்தியானந்தா தெரிவித்துள்ளார். ஆனால் கைலாசா என்ற ஒரு நாடு இருப்பதாக இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கைலாசா நாட்டின் லிங்க்ட்-இன் பக்கத்தில் ரஞ்சிதாவின் புகைப்படத்தை பதிவு செய்து அதில் நித்தியானந்தா மாயி சுவாமி என்றும் அவரது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அவர் தான் கைலாச நாட்டின் பிரதமர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.