close
Choose your channels

பணத்திற்காக மட்டுமே நடிக்க வந்தேன்.. பிரபல நடிகையின் ஓப்பன் டாக்!

Tuesday, January 17, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ரசிகர்களை மகிழ்விக்கவும் கலை சேவை செய்வதற்காக தான் நடிக்க வந்தேன் என பல நடிகைகள் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் பிரபல நடிகை ஒருவர் பணத்திற்காக தான் நடிக்க வந்தேன் என ஓப்பனாக பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரை உலகில் ’மேயாத மான்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகை ஆக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். அதன் பின் அவர் ’கடைக்குட்டி சிங்கம்’ ’மான்ஸ்டர்’ ’திருச்சிற்றம்பலம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்த நிலையில் தற்போது அவர் ‘இந்தியன் 2’ உள்பட ஒரு படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த பிரியா பவானி சங்கர் தான் சினிமாவுக்கு வந்தது குறித்து கூறிய போது ’ஆரம்பத்தில் என்னை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா இல்லையா என்பது பற்றி நான் கவலைப்படவில்லை, நடித்தால் பணம் வருகிறது என்று கூறியதால் நான் பணத்திற்காக நடித்தேன்’ என்று கூறினார்.

மேலும் எதார்த்தமான வாழ்க்கையை பிரதிபலிக்கும் படங்கள் என்றால் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று அந்த வகையில் ’திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரம் என்றாலும் அந்த கதாபாத்திரத்தை விரும்பி நடித்தேன் என்று தெரிவித்தார்.

சினிமா பின்னணி உள்ள குடும்பத்திலிருந்து வந்தவர்களே திரையுலகில் தங்களை நிரூபித்துக் கொள்ள நிறைய கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் நான் இன்னும் அதிகமாக இந்த துறையில் உழைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்’ என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.