close
Choose your channels

உங்க இஷ்டத்துக்கு வதந்தி பரப்பாதீங்க.. மலேசியாவில் இருந்து விளக்கமளித்த தமிழ் சீரியல் நடிகை.!

Monday, May 6, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சீரியல் நடிகை ஒருவர் முக்கிய சீரியலில் இருந்து விலகப் போவதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது மலேசியாவில் கணவருடன் இருக்கும் அவர் அங்கிருந்து கொண்டே இந்த வதந்திக்கு விளக்கம் அளித்துள்ளார்.

சன் டிவியில் ஒளிபரப்பான ’ரோஜா’ என்ற சீரியல் மூலம் பலருடைய கவனத்தை பெற்றவர் நடிகை பிரியங்கா நல்காரி. அந்த சீரியல் அவருக்கு மிகப்பெரிய புகழை பெற்றுக் கொடுத்தது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் ’சீதாராமன்’ என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருந்த பிரியங்கா அந்த தொடரில் இருந்து விலகி தற்போது அதே சேனலில் ஒளிபரப்பாகி வரும் ’நள தமயந்தி’ என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது இந்த சீரியலில் கதை வேறு டிராக்கில் சென்று கொண்டிருக்கும் நிலையில் அவர் இந்த தொடரில் இருந்து விலகப் போவதாகவும் அவருக்கு பதிலாக ’தெய்வம் தந்த பூவே’ தொடரில் நடித்த ஸ்ரீநிதி நடிப்பார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மலேசியாவுக்கு தனது கணவருடன் சுற்றுப்பயணம் செய்துள்ள பிரியங்கா நல்காரி இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில் ’நீங்களாகவே எதையாவது கற்பனை செய்து கொள்ள வேண்டாம், வதந்திகளையும் தயவு செய்து பரப்ப வேண்டாம், அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக காத்திருக்கிறேன், நான் ‘நளதமயந்தி’ சீரியலில் இருந்து விலகவில்லை’ என்று கூறியுள்ளார்.

இதனை அடுத்து அவர் ‘நளதமயந்தி’ சீரியல் இருந்து விலகவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.