close
Choose your channels

ஒரு நாளைக்குக் 100 கால் வருது, பதில் சொல்ல வேண்டியது என் வேலையல்ல.. திருமணமான ஒரே மாதத்தில் பிரிந்த நடிகை..!

Sunday, May 14, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

என்னிடம் பேட்டி எடுக்க ஒரு நாளைக்கு 100 கால்களுக்கு மேல் வருகிறது என்றும் நான் என்னுடைய நிலைமையை யாரிடம் விளக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தயவுசெய்து என்னிடம் பேட்டி கேட்டு யாரும் எனக்கு கால் செய்ய வேண்டாம் என்றும் திருமணமான ஒரே மாதத்தில் கணவரை விட்டு பிரிந்த நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சிப்பிக்குள் முத்து’ உட்பட பல சீரியல்களில் நடித்தவர் சம்யுக்தா. இவர் 'சிப்பிக்குள் முத்து’ சீரியலில் நடித்த விஷ்ணுகாந்த் என்பவரை காதலித்து அதன் பின்னர் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் திருமணமான ஒரே மாதத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது என்பது இதையடுத்து இருவரும் தங்கள் திருமண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் நீக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விஷ்ணுகாந்த் பல யூடியூப் சேனல்களில் சம்யுக்தா குறித்த சில விஷயங்களை கூறிய நிலையில் அதற்கு விளக்கம் கொடுக்க நடிகை சம்யுக்தா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

சுமார் 2 மணி நேரத்திற்கும் அதிக உள்ள இந்த வீடியோவில் விஷ்ணுகாந்த் கூறிய அனைத்து குற்றச்சாட்டுக்களுக்கும் அவர் பதில் அளித்துள்ளார். கடைசியாக தயவு செய்து என்னிடம் யூடியூபர் யாரும் பேட்டி எடுக்க அழைக்க வேண்டாம் என்றும் ஒரு நாளைக்கு 100 கால்களுக்கு மேல் வருகிறது என்றும் அவர்களுக்கெல்லாம் பேட்டி கொடுத்து என்னுடைய நிலைமையை நான் விளக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.