close
Choose your channels

சென்னை மக்களுக்காக உண்டியல் ஏந்தும் தெலுங்கு நடிகர்கள்

Saturday, February 6, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த ஆண்டு இறுதியில் சென்னையில் ஏற்பட்ட கனமழை மற்றும் பெருவெள்ளம் காரணமாக லட்சக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோலிவுட் திரையுலகினர் மட்டுமின்றி அண்டை மாநிலத்தை சேர்ந்த திரையுலகினர்களும் பெருமளவு நிதியளித்தனர்.


குறிப்பாக தெலுங்கு திரையுலகை சேர்ந்த பிரபாஸ் ரூ.15 லட்சம், மகேஷ்பாபு ரூ.10 லட்சம், ரவிதேஜா ரூ.5 லட்சம், கல்யாண் ராம் ரூ.5 லட்சம், சாய்தரம் தேஜா ரூ.3 லட்சம், வருண் தேஜா ரூ.3 லட்சம் என வாரி வழங்கிய நிலையில் நாளை பிரபல நடிகர், நடிகைகள் சென்னை வெள்ள நிவாரணத்திற்காக உண்டியல் ஏந்தி வசூல் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

நாளை மாலை 4 மணி முதல் இரவு 7மணி வரை ஐதராபாத்தில் உள்ள பிரபல வணிக வளாகங்களில் தெலுங்கு திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர், நடிகைகள் பத்து பேர் உண்டியல் ஏந்தி நிதி வசூல் செய்யவுள்ளதாகவும், அந்த பணத்தை சென்னை வெள்ள நிவாரணத்திற்கு அனுப்பவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.