close
Choose your channels

'தளபதி 68' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இந்த நாட்டில் தான்.. உறுதி செய்த அர்ச்சனா கல்பாத்தி?

Monday, November 27, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெறும் இடம் குறித்த தகவல் கசிந்து உள்ளது

இந்த படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது சமூக வலைத்தளத்தில் இஸ்தான்புல் நாட்டிற்கு சென்றிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். இதனை அடுத்து ’தளபதி 68’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இஸ்தான்புல் நாட்டில் தான் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு பல நாடுகளில் நடைபெற உள்ளதாக கூறப்பட்டது. தாய்லாந்து நாட்டில் சமீபத்தில் படப்பிடிப்பு நடந்த நிலையில் அடுத்த கட்டமாக இஸ்தான்புல் நாட்டில் நடைபெற இருப்பதாகவும் அதனை அடுத்து வேறு சில நாடுகளிலும் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

இஸ்தான்புல் நாட்டில் பல பிடிப்பு நடப்பது உறுதி செய்யப்பட்டால் இன்னும் ஒரு சில நாட்களில் விஜய் உட்பட படக்குழுவினர் அந்நாட்டிற்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதி விஜய்யுடன் சினேகா, லைலா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.