close
Choose your channels

தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு சுத்தமா அறிவே கிடையாது: தங்கர் பச்சானின் வைரல் வீடியோ

Tuesday, April 30, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் மற்றும் இயக்குனர் தங்கர்பச்சான் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கடலூர் தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோவில் தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு அறிவே கிடையாது என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த வீடியோவில் அவர் ’கடலூர் மாவட்டத்தில் முந்திரி பழம் நன்றாக விளைச்சல் உள்ளது என்றும் இந்த முந்திரி பழத்தை சரியாக பயன்படுத்தும் வகையில் ஒரு ஆலை அமைத்து ஜூஸ் உற்பத்தி செய்து விற்பனை செய்தால் இங்கு உள்ளவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் முந்திரி பழம் மருத்துவ குணம் உடையது என்றும் இதை எப்படி சாப்பிட வேண்டும் என்ற அறிவு கூட தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு கிடையாது என்றும் இதை சரியான முறையில் சாப்பிட்டால் வைட்டமின் சத்துக்கள் கிடைக்கும் என்றும் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசியல்வாதிகள் சாராய ஆலைகள் திறப்பதற்கு பதிலாக கடலூர் பகுதியில் முந்திரி பழ ஜூஸ் உற்பத்தி ஆலையை திறந்தால் நாட்டிற்கு நல்லது என்றும் இந்தியாவிலேயே அதிகமாக முந்திரி பழம் விளைச்சல் ஆவது கடலூர் மாவட்டத்தில் தான் என்றும் ஆனால் இந்தியாவிலேயே அதிகமாக குடிசை பகுதி உள்ள பகுதியாக கடலூர் மாவட்டம் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். தங்கர்பச்சானின் இந்த வீடியோ தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.