close
Choose your channels

மரண பயத்தை கொடுத்த தமிழ் படம்.. 2 மாதமா தூங்கவே இல்லை.. எம்.எம்.கீரவாணி ..!

Monday, July 24, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் தான் இசையமைத்துக் கொண்டிருக்கும் தமிழ் திரைப்படத்தை பார்த்து மரண பயம் ஏற்பட்டதாகவும் இரண்டு மாதங்கள் அதன் தாக்கத்தால் தான் தூங்கவே இல்லை என்றும் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராகவா லாரன்ஸ் நடிப்பில், பி வாசு இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’சந்திரமுகி 2’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் இந்த படத்திற்கு இசையமைத்து வரும் ஆஸ்கார் நாயகன் எம்.எம்.கீரவாணி தனது ட்விட்டர் பக்கத்தில் ’சந்திரமுகி 2’ படத்தை பார்த்து எனக்கு தூக்கமே வரவில்லை. அதில் வரும் கேரக்டர்கள் என்னை மரண பயத்தில் ஆழ்த்தியது. இரண்டு மாதங்களாக இந்த படத்தை பார்த்ததால் எனக்கு தூக்கமே இல்லை என்று தெரிவித்துள்ளார். இந்த ட்விட்டிற்குபின் ’சந்திரமுகி 2’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வரும் விநாயகர் சதுர்த்தி தின விருந்தாக வெளியாகும் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகியுள்ளது. ராகவா லாரன்ஸ் வேட்டையன் கேரக்டரிலும், சந்திரமுகி கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்திருக்கும் இந்த படத்தில் லட்சுமி மேனன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். லைகா நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில், ஆர் ஜி ராஜசேகர் ஒளிப்பதிவில், தோட்டா தரணி கலை இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos