'லியோ'வை அடுத்து மீண்டும் விஜய்யுடன் இணைந்த த்ரிஷா? வேற லெவல் தகவல்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் நாயகியாக நடித்து வரும் நடிகை த்ரிஷா தற்போது மீண்டும் பிஸி ஆகி உள்ளார் என்பதும் விஜய், அஜித், கமல்ஹாசன், மோகன்லால், நிவின்பாலி, சிரஞ்சீவி என தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களுடன் அவர் இணைந்து நடித்து வருகிறார் என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் நிற்க கூட நேரமில்லாமல் பிசியாக இருக்கும் த்ரிஷா திடீர் என விஜய் நடித்து வரும் ’கோட்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. அப்பா, மகன் என இரண்டு கேரக்டர்களில் விஜய் நடித்து வரும் நிலையில் த்ரிஷா ஒரு முக்கிய கேரக்டரில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாகவும், அவர் ஏற்கனவே இரண்டு நாள் படப்பிடிப்பை முடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் விஜய்க்கும் த்ரிஷாவுக்கும் ஒரு பாடல் காட்சியும் ’கோட்’ படத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த வேற லெவல் தகவல் வெளியானதில் இருந்து விஜய் மற்றும் த்ரிஷா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த படத்தில் அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் விஜய் நடித்து வரும் நிலையில் அதில் ஒரு கேரக்டர் நெகட்டிவ் கேரக்டர் என்றும் மேலும் இந்த படம் ஒரு சயின்ஸ் பிக்சன் த்ரில்லர் படமாக உருவாக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருவதை பார்க்கும் போது இந்த படத்திற்கு வேற லெவலில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது.
விஜய், பிரசாந்த், மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பார்வதி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வரும் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார் என்பதும் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments