close
Choose your channels

சூர்யா, ஆர்யா, அனுஷ்கா கலந்து கொள்ளும் மிகப்பெரிய விழா

Tuesday, January 16, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஸ்டுடியோக்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த பொங்கல் விருந்தாக வெளிவந்த சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் இந்த ஆண்டின் முதல் வெற்றிப்படம் என்று ரசிகர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளை சென்னையில் ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் மிகப்பெரிய விழா ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

ஸ்டுடியோக்ரீன் தயாரிப்பில் உருவான 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் வெற்றி விழா மற்றும் இதே நிறுவனம் தயாரிப்பில் ஆர்யா நடித்து வரும் 'கஜினிகாந்த்' படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ் விழா மற்றும் இந்நிறுவனம் வெளியிடும் அனுஷ்காவின் 'பாகமதி' படத்தின் இசை வெளியீட்டு விழா, மேலும் இந்நிறுவனம் தயாரித்து வரும் இன்னொரு படமான 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தின் இரண்டாவது சிங்கிள் ரிலீஸ் விழா ஆகிய நான்கு விழாக்களும் நாளை மதியம் 3 மணிக்கு சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த விழாவில் சூர்யா, ஆர்யா, அனுஷ்கா உள்பட நான்கு படங்களின் படக்குழுவினர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.