close
Choose your channels

'தக்லைஃப்' படத்தில் இணைந்த 2 பிரபலங்கள்.. அதில் ஒருவர் 'நாயகன்' நடிகர்..!

Saturday, January 6, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படம் ’தக்லைஃப்’. இந்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இம்மாத இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே ’இந்தியன் 2 ’ படத்தின் படப்பிடிப்பை கமல்ஹாசன் முடித்துவிட்ட நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் ’கல்கி 2898’ என்ற படத்தின் படப்பிடிப்பையும் முடித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து அவர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’தக்லைஃப்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார்.

இந்த நிலையில் ஏற்கனவே இந்த படத்தில் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், கவுதம் கார்த்திக் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியான நிலையில் தற்போது மேலும் இரண்டு பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களில் ஒருவர் நாசர் என்றும் கூறப்படுகிறது.

’தக்லைஃப்’ திரைப்படம் ஏற்கனவே ’நாயகன்’ படத்துடன் கனெக்சன் இருப்பதாக கூறப்படும் நிலையில் ’நாயகன்’ படத்தில் கமல்ஹாசன் மருமகனாக நடித்த நாசர் இந்த படத்தில் இணைந்துள்ளது அதனை மேலும் வலுப்படுத்தி உள்ளது

இதனை அடுத்து இந்த படத்தில் நடிக்கும் இன்னொரு பிரபலம் நடிகை அபிராமி. இவர் ஏற்கனவே கமல்ஹாசன் ஜோடியாக ’விருமாண்டி’ திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு ரவி கே சந்திரன் ஒளிப்பதிவும், ஸ்ரீதர் பிரசாத் படத்தொகுப்பு பணியும் செய்ய உள்ளனர். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்க உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.