close
Choose your channels

விஜய் பாணியில் கேரளாவுக்கு நிவாரண நிதி கொடுத்த பில்கேட்ஸ்

Saturday, August 25, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் பாணியில் கேரளாவுக்கு நிவாரண நிதி கொடுத்த பில்கேட்ஸ்

 

சமீபத்தில் கேரளாவில் ஏற்பட்ட கனமழை மற்றும் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கோலிவுட் திரையுலகினர் பலர் லட்ச லட்சமாக நிதியளித்து உதவினர். திரையுலகினர் அனைவரும் கேரள முதல்வரிடம் வெள்ள நிவாரண நிதியாக கொடுத்த நிலையில் நடிகர் விஜய் மட்டும் வித்தியாசமாக கேரளாவில் உள்ள தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளின் வங்கி கணக்கிற்கு தலா ரூ.3 லட்சம் என மொத்தம் ரூ.70 லட்சம் அனுப்பி அந்த பணம் உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்றடையும் வகையில் செய்தார்.

இந்த நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் அவர்கள் தனது மெலிண்டா-பில்கேட்ஸ் அறக்கட்டளை மூலம் கேரள வெள்ள நிவாரண நிதியாக $6 லட்சம் கொடுத்துள்ளார். இந்த பணத்தை அவர் விஜய் பாணியில் கேரள அரசிடம் கொடுக்காமல், கேரளாவில் மீட்புப்பணிகளை செய்து வரும் யூனிசெப் அமைப்பிற்கு வழங்கி, கேரள மக்களுக்கு இந்த பணத்தின் மூலம் உதவி செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் கேரளாவில் வெள்ளத்தால் பலியான மக்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ள பில்கேட்ஸ், விரைவில் அம்மாநில மக்கள் இந்த துயரத்தில் இருந்து மீண்டு வர தான் விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.