close
Choose your channels

'வானத்தை போல' சீரியல் நடிகைக்கு திருமணம்.. இன்ஸ்டாவில் பகிர்ந்த புகைப்படங்கள்..!

Friday, May 10, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சன் டிவியில் ஒளிபரப்பான ’வானத்தைப்போல’ என்ற சீரியல் நடிகைக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் தற்போது திருமணம் நடந்துள்ளது. திருமண புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ’வானத்தைப்போல’ என்ற சீரியலில் துளசி என்ற கேரக்டரில் நடிகை ஸ்வேதா நடித்து கொண்டிருந்த நிலையில் திடீரென ஒரு சில காரணங்களால் அந்த தொடரில் இருந்து அவர் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் ஸ்வேதாவுக்கும் அவரது காதலர் மது சங்கர் கௌடா என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் விரைவில் திருமணம் நடக்கும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது அவருக்கு திருமணம் நடந்துள்ள நிலையில் திருமணம் குறித்த புகைப்படத்தை ஸ்வேதா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து உள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தார் தெரிவித்து வருகின்றனர்.

நடிகை ஸ்வேதா தற்போது கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘கண்ணெதிரே தோன்றினாள்’ என்ற சீரியலில் நடித்து வரும் நிலையில் திருமணத்திற்கு பின்னர் அவர் நடிப்பை தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.