close
Choose your channels

கெட்ட வார்த்தையால் திட்டிய விஜய் ரசிகர்.. வெங்கட்பிரபுவின் பதிலடி என்ன தெரியுமா?

Saturday, March 2, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் ரசிகர் ஒருவர் ‘கோட்’ படத்தின் அப்டேட் கேட்டு இயக்குனர் வெங்கட் பிரபுவை கெட்ட வார்த்தையால் திட்டிய நிலையில் அவருக்கு வெங்கட் பிரபு பதிலடி கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் ‘கோட்’ திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு மாஸ்கோவில் நடைபெற உள்ளது.

இன்னும் ஒரு சில நாட்களில் படக்குழுவினர் மாஸ்கோ செல்ல இருக்கும் நிலையில் சமூக வலைதளத்தில் ரசிகர் ஒருவர் ‘கோட்’ படத்தின் சிங்கிள் எப்போது வரும் என கடந்த சில நாட்களுக்கு முன் கேட்டார். அதற்கு பதில் கூறிய வெங்கட் பிரபு விரைவில் வரும் என்று கூறினார்.

இதனை அடுத்து அந்த ரசிகர் மீண்டும் ’சீக்கிரம் வரும் என்று சொன்னீர்கள், ஆனால் ஒரு வாரம் ஆகியும் இன்னும் சிங்கிள் அப்டேட் வரவில்லையே’ என்று கூறியதோடு ஒரு கெட்ட வார்த்தை கூறி வெங்கட் பிரபுவை திட்டி உள்ளார். இதற்கு வெங்கட் பிரபு ’சொல்லலாம் என்றுதான் நினைச்சேன், இப்போ இதுக்கு மேல எப்படி என்று நீங்களே சொல்லுங்க, என்று கூறியதோடு விஜய் #VijaynaBloods என்ற ஹேஷ்டேக்கையும் பதிவு செய்துள்ளார். வெங்கட் பிரபுவின் இந்த பதிவு சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இதனை அடுத்து விஜய் ரசிகர்கள் வெங்கட் பிரபுவிடம் மன்னிப்பு கேட்டதோடு ’இது மாதிரி தரங்கெட்ட நபர்களுக்கு எல்லாம் பதில் சொல்லி உங்கள் தரத்தை எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் விஜய் ரசிகர்களுக்கு உங்கள் படம் தான் பதிலாக இருக்க வேண்டும்’ என்றும் கூறி வருகின்றனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.