close
Choose your channels

பழம்பெரும் இயக்குனர் தாசரி நாராயண ராவ் மறைவு: கமல், ரஜினி இரங்கல்

Wednesday, May 31, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் இயக்குனர், தயாரிப்பாளர், வசனகர்த்தா, நடிகர் தாசரி நாராயணராவ் நேற்றிரவு 7 மணிக்கு காலமானார். அவரது மறைவு தெலுங்கு திரையுலகை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

மறைந்த இயக்குனருக்கு சினிமா பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் இன்று ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் படப்பிடிப்புகள் மற்றும் அனைத்து பணிகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை தெலுங்கு பிலிம் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

மறைந்த இயக்குனர் தாசரி நாராயண ராவ் அவர்களின் மறைவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் ஆகியோர் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: இந்தியாவின் தலைசிறந்த இயக்குநர், நடிகர்களில் ஒருவர் தாசரி நாரயண ராவ். அவரது இழப்பு இந்திய சினிமாவிற்கு ஈடுஇணை செய்ய முடியாதது. தாசரி நாரயண ராவ் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில், 'தாசரி நாராயண ராவ் மறைவு தெலுங்கு சினிமாவிற்கு மிகப்பெரிய இழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இயக்குநர் கே.பாலச்சந்தர் பார்த்து வியந்தவர் தாசரி நாராயணராவ் என்றும் கமல்ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார்.

I remember the days spent with Narayan rao gaaru and Mr. Sanjeev kumar ji. Yaadgaar. He was a great fan of Mr.KB. I belong to a great family

— Kamal Haasan (@ikamalhaasan) May 30, 2017

#RIP #DasariNarayanaRao ji pic.twitter.com/RHwRcgfLsl

— Rajinikanth (@superstarrajini) May 30, 2017

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.