close
Choose your channels

வாடகைத்தாய் சர்ச்சை விவகாரம்.. இன்ஸ்டாகிராமில் விக்னேஷ் சிவனின் லேட்டஸ்ட் பதிவு!

Friday, October 14, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தம்பதிகள் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றதாக ஒருபக்கம் சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செய்துள்ள பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

இயக்குனர் விக்னேஷ் மற்றும் நடிகை நயன்தாரா ஆகிய இருவரும் கடந்த ஜூன் 9-ஆம் தேதி திருமணம் செய்துகொண்ட நிலையில் நான்கே மாதத்தில் தாங்கள் பெற்றோர் ஆகி விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதனை அடுத்து வாடகை தாய் மூலம் விக்கி-நயன் தம்பதிகள் குழந்தை பெற்று இருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில் இது குறித்த சர்ச்சைகளும் எழுந்தன.

இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் இது குறித்து விசாரணை செய்ய மூன்று நபர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த குழு விசாரணை செய்து அறிக்கை கொடுத்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார். மேலும் வாடகைத்தாய் விவகாரத்தில் சட்ட விதிமுறைகள் மீறப்பட்டதா? என்பது குறித்து குழுவினர்கள் விசாரிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் ஒரு பக்கம் வாடகைத்தாய் விவகாரம் சமூக வலைதளங்களில் பரபரப்பாக வைரல் ஆகி வரும் நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில் புதிய பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

உங்கள் மீது அக்கறை செலுத்துபவர்களிடம் நீங்கள் கவனம் செலுத்துங்கள், ஏனெனில் அவர்கள் தான் எப்போதும் உங்களுடன் இருப்பவர்கள்.

யார் உங்களிடம் சிறப்பாக இருக்க விரும்புகிறார்களோ, அவர்கள் தான் உங்களுக்கானவர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள், அது தான் உண்மையும் கூட..

எல்லாம் சரியான தருணத்தில் உங்களை வந்து சேரும், அதுவரை பொறுமையுடன் நன்றியுடன் இருங்கள்!

என விக்னேஷ் சிவன் தனது பதிவில் தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.