close
Choose your channels

இலங்கை தமிழர்கள் குறித்து சேரன் பேசியதற்கு விஷாலின் கருத்து

Monday, August 29, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் சேரன் திருட்டு டிவிடி கும்பல் மற்றும் இணையதளங்களில் சட்டவிரோதமாக புதிய படங்களை வெளியிடுபவர்கள் பெரும்பாலும் இலங்கை தமிழர்களாக உள்ளதாக பேசினார்.
சேரனின் சர்ச்சைக்குரிய இந்த பேச்சுக்கு இலங்கை தமிழர்களிடம் இருந்து கண்டனங்கள் எழுந்து வந்த நிலையில் நடிகர் சங்க செயலாளர் விஷால் இதுகுறித்து தனது சமூகவலைத்தளத்தில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழர்கள் குறித்து சேரன் பேசியது தேவையற்றது. இலங்கைத் தமிழர்கள் மீது குற்றம் சுமத்துவதை தவிர்ப்போம். அவர்கள் இப்போதாவது அமைதியாக வாழட்டும்" என்று கூறியுள்ளார்.
இலங்கை தமிழர்களை தான் ஒட்டுமொத்தமாக கூறவில்லை என்றும் தவறு செய்யும் ஒருசிலர்களை மட்டுமே தான் விமர்சனம் செய்ததாக சேரன் தனது பேச்சுக்கு ஏற்கனவே விளக்கமளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.