close
Choose your channels

விஜய்க்காக காத்திருக்கும் 10 இயக்குனர்கள்

Tuesday, November 3, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் எதிர்பார்த்த வசூலை தரவில்லை என்றாலும், அவருடைய அடுத்த படத்தை இயக்க கோலிவுட்டின் முன்னணி இயக்குனர்கள் பலர் காத்திருப்பதாக கூறப்படுகிறது.

தற்போதைய நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை இயக்க கோலிவுட்டில் ஜெயம் ராஜா, எஸ்.ஜே.சூர்யா, உள்பட பத்து முன்னணி இயக்குனர்கள் காத்திருப்பதாக கூறப்படுகிறது. இவர்களிடம் விஜய் கதை கேட்டிருந்தாலும், இன்னும் இவர்தான் இயக்குனர் என்பதை விஜய் முடிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

'புலி' திரைப்படம் கொடுத்த அனுபவம் காரணமாக தனது அடுத்த படத்தின் இயக்குனரை தேர்வு செய்வதில் விஜய் மிகவும் கவனமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விஜய் 59' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று முதல் விஜய்-எமிஜாக்சன் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் வரும் டிசம்பருடன் முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.