close
Choose your channels

நீண்ட இடைவெளிக்கு பின் தமிழில் ரீஎண்ட்ரி ஆன விஜய்-சூர்யா பட நாயகி!

Wednesday, August 24, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் மற்றும் சூர்யா உள்பட பல பிரபல நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்த நடிகை ஒருவர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தற்போது மீண்டும் தமிழ் திரையுலகில் ரீஎன்ட்ரி ஆகி உள்ளார்.

விஜய் நடித்த ’பத்ரி’ சூர்யா நடித்த ’சில்லுனு ஒரு காதல்’ உள்பட பல தமிழ் திரைப்படங்களிலும் தெலுங்கு ஹிந்தி திரைப்படங்களில் நடித்தவர் நடிகை பூமிகா சாவ்லா. இவர் கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் செய்த பின்னர் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார் என்பதும், குறிப்பாக தமிழில் இவர் மிக குறைந்த படங்களிலேயே நடித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஜெயம் ரவி நடிப்பில் எம் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சமீபத்தில் வெளியான தெலுங்கு திரைப்படமான ’சீதாராமம்’ என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த பூமிகா சாவ்லா தற்போது தமிழ் திரையுலகிலும் ரீஎன்ட்ரி ஆகி இருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



ஜெயம் ரவி, பிரியங்கா மோகன் நடிக்கும் ஜெயம் ரவியின் 30வது படத்தில் ஜெயம் ரவியின் சகோதரியாக பூமிகா சாவ்லா நடிக்க இருப்பதாகவும் நேற்றைய படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. ரொமான்ஸ் மற்றும் காமெடி படமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.