close
Choose your channels

தெலுங்கு மாநில விஜய் ரசிகர்களுக்கு ஒருநாள் சோகம்

Monday, October 16, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் தடைகள் பல கடந்து வெற்றிகரமாக வரும் தீபாவளி தினத்தில் விஜய் ரசிகர்களுக்கு தீபாவளி பரிசாக வரும் அக்டோபர் 18ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த நற்செய்தியால் உலகம் முழுவதிலும் உள்ள விஜய்யின் தமிழ் ரசிகர்கள் உற்சாகமாக உள்ள நிலையில் விஜய்யின் தெலுங்கு மாநில ரசிகர்களுக்கு மட்டும் ஒருநாள் சோகம் ஏற்பட்டுள்ளது

ஆம், 'மெர்சல்' படத்தின் தெலுங்கு பதிப்பான 'அதிரிந்தி' திரைப்படம் தீபாவளிக்கு மறுநாள் அதாவது அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது. இந்த செய்தி தெலுங்கு விஜய் ரசிகர்களுக்கு ஒருசிறிய வருத்தத்தை கொடுத்தாலும் தடையின்றி இந்த படம் வெளிவருவது குறித்து தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் 'மெர்சல்' திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 4000 திரையரங்குகளில் வெளிவரவுள்ளதால் இந்த படத்தின் ஓப்பனிங் வசூல் புதிய சாதனையை ஏற்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று கூறப்படுகிறது. ரிலீசுக்கு முன்னர் யூடியூபில் அதிகமான லைக்ஸ்களை பெற்ற டீசர் என்ற சாதனையை ஏற்படுத்தியுள்ள 'மெர்சல்' ரிலீசுக்கு பின்னர் இன்னும் என்னென்ன சாதனையை ஏற்படுத்தவுள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.