close
Choose your channels

இராஜபாளையம் பெண்களின் அழகை ரசித்தேன். விஷால்

Tuesday, May 17, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷால், ஸ்ரீதிவ்யா, நடிப்பில் வரும் 20ஆம் தேதி வெளியாகவுள்ள 'மருது' திரைப்படத்தின் பெரும்பாலான பகுதியின் படப்பிடிப்புகள் இராஜபாளையத்தில்தான் நடைபெற்றது. இயக்குனர் முத்தையாவின் சொந்த ஊர் என்பதால் அந்த ஊரின் இண்டு இடுக்கெல்லாம் அவருக்கு அத்துபடி, என்றும், அந்த ஊரையே அவர் ஒரு பிலிம் சிட்டியாக மாற்றிவிட்டதாகவும் விஷால் கூறியுள்ளார்.

மேலும் ராஜபாளையம் என்றாலே நாய்களுக்குப் புகழ்பெற்றது என்று கூறுவார்கள். ஆனால் அந்த ஊர் அழகான பெண்களுக்கும் பெயர் பெற்றது. அங்கு அழகழகான பெண்களைக் கண்டு வியந்தேன். ரசித்தேன்.

இந்த படத்தில் ராதாரவி, சூரி ஆகிய இருவருமே முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். ராதாரவியுடன் நடிப்பதில் எனக்கு எந்த தயக்கவும் இருந்ததில்லை. நடிகர் சங்க தேர்தலை அவர் ஒரு கோணத்தில் பார்த்தார். நான் ஒரு கோணத்தில் பார்த்தேன். அவ்வளவுதான்

மேலும் இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கும் ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் பேய் என்றும் ராட்சசன் என்றும் கூறலாம். அந்த அளவுக்கு அவர் வெளுத்து வாங்கியுள்ளார். இந்த படம் எனக்கு மட்டுமின்றி பார்வையாளர்களுக்கும் திருப்தியான படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இவ்வாறு விஷால் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.