close
Choose your channels

பூர்ணிமாவிடம் மன்னிப்பு கேட்டு அழுது கொண்டே செல்லும் விஷ்ணு... என்ன காரணம்?

Monday, December 11, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பூர்ணிமாவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு விஷ்ணு அழுது கொண்டே செல்லும் காட்சி இன்றைய மூன்றாவது ப்ரோமோவில் உள்ளது

பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக 70 வது நாளை தாண்டி சென்று கொண்டிருக்கின்ற நிலையில் நேற்று வரை கலகலப்பாகவும் ஆக்ரோஷமாகவும் இருந்த விஷ்ணு, நேற்றைய கமல் எபிசோடுக்கு பிறகு ரொம்பவே மனம் உடைந்து விட்டார்

இன்று முழுவதுமே அவர் மிகவும் சோகமாக இருக்கும் நிலையில் பூர்ணிமாவிடம் அவர் மன்னிப்பு கேட்கிறார். ’நீங்களும் தினேஷம் சேர்ந்து கொண்டு என்னென்ன செய்தீர்கள் என்று எனக்கு தெரியும்’ என பூர்ணிமா கூறியபோது, ‘உன் மனம் வருத்தப்படும்படி நான் நடந்து விட்டேன் என்பது உண்மைதான், மன்னித்துக்கொள்’ என்று கூறுகிறார்.

’வெளியில் சென்றவுடன் நாம் நண்பர்களாக இருக்கலாம்' என்று பூர்ணிமா சொல்ல அதற்கு விஷ்ணு அழுது கொண்டே அந்த இடத்தை விட்டு செல்கிறார். பூர்ணிமாவும் மிகவும் சோகமாக இருக்கும் காட்சியுடன் இன்றைய புரமோ முடிவுக்கு வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் பூர்ணிமா மற்றும் விஷ்ணு நெருக்கமாக இருந்த நிலையில் திடீரென இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தற்போது விஷ்ணு மீண்டும் மன்னிப்பு கேட்டதை அடுத்து இருவருக்கும் இடையே மீண்டும் நெருக்கம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.