close
Choose your channels

யார் இந்த ரஞ்சனா நாச்சியார்? பிரபல இயக்குனரின் நெருங்கிய உறவினரா?

Saturday, November 4, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையில் நேற்று அரசு பேருந்தில் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்த போது திடீரென அந்த பேருந்தை வழிமறித்து மாணவர்களை சரமாரியாக தாக்கியதோடு டிரைவர் மற்றும் கண்டக்டரையும் அவதூறாக பேசியதாக ரஞ்சனா நாச்சியார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்

பொது இடத்தில் மாணவர்களை தாக்கியதாக ரஞ்சனா நாச்சியார் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் இவர் ஏற்கனவே தனது மகள் மீது அவரது மாமனார் மாமியார் தாக்குதல் நடத்தியதாக மாங்காடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது அவரே சட்டத்தை தனது கையில் எடுத்துக் கொண்டு படிக்கட்டில் பயணம் செய்த பள்ளி மாணவர்களை அடித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஆர்வலர் என்று கூறிக்கொண்டு ஆளாளுக்கு சட்டத்தை கையில் எடுத்தால் சட்டம், போலீஸ், நீதிமன்றம், நிர்வாகம் எதற்கு? என்ற கேள்விகளை பொதுமக்கள் எழுப்பி வருகின்றனர்.

மேலும் சர்ச்சைக்குரிய வகையில் செயல்பட்ட ரஞ்சனா நாச்சியார் இயக்குனர் பாலாவின் உடன் பிறந்த அண்ணன் மகள் என்றும் கூறப்படுகிறது. மேலும் இவர் ’துப்பறிவாளன்’ ’இரும்புத்திரை’ ’அண்ணாத்த’ ’டைரி’ ’நட்பே துணை’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக ’டைரி’ திரைப்படத்தில் இவர் பேசிய ’போலீஸ்ன்னா அடிப்பீங்களா என்ற வசனம் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.