close
Choose your channels

'தளபதி 66' படத்தில் இருந்து திடீரென விலகிய இயக்குனர்: என்ன காரணம்?

Friday, April 8, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 66’ திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது என்பதும் ஒரு சில காட்சிகளும் படமாக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் பூஜையில் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், வம்சி, தில் ராஜூ, தமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தில் வசனம் எழுதுவதாக கூறப்பட்ட இயக்குனர் ராஜுமுருகன் பூஜையின்போது வருகை தரவில்லை. இதனால் அவர் இந்த படத்தில் பணிபுரிகின்றாரா? இல்லையா? என்றா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்தது.

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி இயக்குனர் ராஜுமுருகன் அடுத்ததாக கார்த்தி நடிக்கும் படத்தை அடுத்த மாதம் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தையு ட்ரீம்வாரீயர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் பணிகளில் பிசியாக இருந்ததால் அவர் ’தளபதி 66’ படத்தின் வசனம் எழுதும் பணியில் இருந்து விலகி விட்டதாகவும் கூறப்படுகிறது .

இதனை அடுத்து தற்போது பாடல்கள் மற்றும் வசனம் ஆகிய இரண்டையும் பாடலாசிரியர் விவேக் எழுத உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.