close
Choose your channels

விஷால் மனு மறுபரிசீலனை செய்ய வாய்ப்பு: தேர்தல் ஆணையம் தகவல்

Thursday, December 7, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை ஆர்.கே.நகரில் விஷால் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்ட நிலையில் இன்று இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடவுள்ளது.

இந்த நிலையில் நேற்று மாலை நடிகர் விஷால் தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அவர்களிடம் மனு ஒன்றை அளித்தார். 

இந்த நிலையில் விஷாலை முன்மொழிந்த பின் மறுப்பு தெரிவித்த இரண்டு பேர்களும் இன்று மாலை 3 மணிக்குள் தேர்தல் ஆணையரை சந்தித்து விளக்கம் அளிக்கும் பட்சத்தில் விஷாலின் வேட்புமனு மறுபரிசீலனை செய்ய வாய்ப்பு இருப்பதாக தேர்தல் ஆணைய வட்டாரங்களில் இருந்து தகவல் வெளிவந்துள்ளது. மறுப்பு தெரிவித்த இருவரும் தாங்கள் மிரட்டப்பட்டதாலே மறுப்பு தெரிவித்ததாக கூறினால் விஷாலின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படும் என கூறப்படுகிறது. 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.