நீ மேலே இருந்து என்னை பார்க்கிறாய் என்று தெரியும்: விபத்துக்கு பின் முதல் நிகழ்ச்சியில் யாஷிகா!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகை யாஷிகா கடந்த ஜூலை மாதம் கார் விபத்து ஒன்றில் சிக்கினார் என்பதும் இந்த விபத்தில் அவரது உயிர் தோழிகளில் ஒருவரான பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் கடந்த நான்கு மாதங்களாக எலும்பு முறிவு உள்பட பல்வேறு காயங்களுக்கு சிகிச்சை பெற்று வந்த யாஷிகா தற்போது முதல் முதலாக விபத்துக்கு பின் ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள யாஷிகா, ‘என்னை சுற்றி உள்ள நெருப்பை விட எனக்குள் இருந்த நெருப்பு பிரகாசமாக இருந்ததால் நான் உயிர் பிழைத்தேன் என்று கூறியுள்ளார். மேலும் மறைந்த தனது தோழி பவானி குறித்து அவர் கூறிய போது, ‘நீ என்னை மேலே இருந்து பார்க்கிறாய் என்று எனக்கு தெரியும். கண்டிப்பாக நான் உன்னை பெருமைப்படுத்தும் வகையில் நடந்து கொள்வேன் என உறுதி அளிக்கிறேன். உன்னை எப்போதும் நான் மிஸ் செய்கிறேன்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவும் யாஷிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.