close
Choose your channels

ஜீ டிவியின் 'சரிகமபதநீ' டைட்டில் வின்னரான இலங்கையின் இளங்குயில்.. குவியும் வாழ்த்துக்கள்..!

Monday, December 18, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நடந்த நிலையில் அதில் ஸ்ரீநிதி என்ற சிறுமி டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றார் என்றும் அவருக்கு 60 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக கிடைத்தது என்பதையும் பார்த்தோம்

இந்த நிலையில் விஜய் டிவியை அடுத்து ஜி டிவியில் கடந்த சில மாதங்களாக நடந்து வந்த சரிகமபதநி நிகழ்ச்சியின் ஃபினாலே நேற்று நடந்த நிலையில் இதில் இலங்கை சேர்ந்த சிறுமி டைட்டில் பட்டம் பெற்றுள்ளார் இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

ஜீ டிவியில் அர்ச்சனா தொகுத்து வழங்கிய ’சரிகமபதநி’ என்ற பாட்டு நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் நடந்து வந்தது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று நேற்று பிரமாண்டமாக நடந்த நிலையில் இதில் யுவன் சங்கர் ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த சீசனில் இலங்கையை சேர்ந்த சிறுமி கில்மிசா என்பவர் தான் டைட்டில் பட்டதை வென்றார். இலங்கையில் இருந்து தமிழ்நாடு வந்து டைட்டில் பட்டம் வெல்லும் முதல் சிறுமி இவர்தான் என்று பெருமை அவருக்கு உண்டு. இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிறுமி கில்மிசாவுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் கில்மிசாவுக்கு 10 லட்ச ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது.

இரண்டாவது இடத்தை ருத்ரேஷ், மூன்றாவது இடத்தை சஞ்சனா ஆகியோர் பிடித்தனர் என்பதும் இருவருக்கும் தலா 2 லட்சம் பரிசு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.