close
Choose your channels

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் குஷ்பு

Monday, October 24, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருடைய உடல்நிலை குறித்து அறிய டெல்லி தலைவர்கள் முதல் உள்ளூர் தலைவர்கள் வரை அப்பல்லோ சென்று அங்குள்ள மருத்துவர்களிடமும், அமைச்சர்களிடம் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல நடிகையும், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளருமான குஷ்பு இன்று அப்பல்லோ மருத்துவமனை சென்று முதல்வரின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, 'முதல்வர் உடல்நிலை குறித்து அமைச்சர்களிடம் கேட்டறிந்தேன். முதல்வர் விரைவில் பூரண குணமடைந்து, வீடு திரும்பி மக்களுடன் தீபாவளியை கொண்டாட வேண்டும்' என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.