close
Choose your channels

சென்னை மெரீனா கடற்கரையில் ஜெயலலிதா இட்லி

Tuesday, December 20, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவகத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்திற்கு தினமும் லட்சக்கணக்கான பொதுமக்கள் கடந்த 10 தினங்களுக்கும் மேலாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஜெயலலிதா சமாதியை பார்க்க வருபவர்களுக்கு அதிமுக சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னை மெரீனா கடற்கரையில் ஜெயலலிதா முகத்தை போன்று வடிவமைக்கப்பட்ட இட்லி வைக்கப்பட்டுள்ளது. 68 கிலோ இட்லியால் பிரமாண்டமாக ஜெயலலிதா முகம் போன்று வடிவமைக்கப்பட்ட இந்த இட்லியை பார்வையிட சென்னை மெரீனா கடற்கரைக்கு அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் இன்று காலை முதல் குவிந்து வருகின்றனர்.

வழக்கத்தைவிட இன்று அதிக கூட்டம் காணப்படுவதால் ஜெயலலிதா சமாதியில் காவல்துறையினர் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.