close
Choose your channels

ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த படத்தின் நாயகி இவர்தான்.. 900 கோடி வசூல் படத்தில் நடித்தவர்..!

Thursday, May 9, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் அடுத்த படத்தில் 900 கோடி வசூல் செய்து சாதனை செய்த படத்தின் நாயகி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏஆர் முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் படத்தை முடித்தவுடன் அடுத்ததாக ஏஆர் முருகதாஸ், சல்மான்கான் நடிக்கும் திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும் சமீபத்தில் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் ’சிக்கந்தர்’என்ற டைட்டில் அறிவிப்பும் வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் ’சிக்கந்தர்’என்ற திரைப்படத்தில் சல்மான்கான் ஜோடியாக நடிக்க பிரபல பாலிவுட் மற்றும் தெலுங்கு திரை உலகில் நடிகைகளை பரிசீலனை செய்து வந்த நிலையில் தற்போது இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகை ராஷ்மிகா மந்தனா ஏற்கனவே பாலிவுட்டில் வெளியான ’அனிமல்’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்திருந்தார் என்பதும் அந்த படம் 900 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து மீண்டும் ஒரு பெரிய பாலிவுட் வாய்ப்பை ராஷ்மிகா மந்தனா பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகும் என்றும் அந்த தகவல்கள் ரசிகர்களை ஆச்சரியத்தை ஆழ்த்தும் என்று கூறப்பட்டு வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.