close
Choose your channels

ஏ.ஆர்.முருகதாஸ் மீது தேசத்துரோக நடவடிக்கை எடுக்க சென்னை கமிஷனரிடம் புகார்

Thursday, November 8, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் கடந்த இரண்டு நாட்களாக ஒருசில கட்சிகளின் அரசியல்வாதிகளின் கண்டனங்களை பெற்று வரும் நிலையில் இந்த படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது தேசத்துரோக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சியில் தமிழக அரசு கொடுத்த இலவச பொருட்களை பொதுமக்கள் தீயில் இட்டு கொளுத்துவது போன்று உள்ளது. இந்த காட்சியில் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களே ஒரு பொருளை தீயில் போடுவார். இந்த காட்சி அரசின் திட்டங்களை இழிவுபடுத்துவது போன்றும் மக்களின் மனதை புண்படுத்துவது போன்று இருப்பதாகவும் சமூக ஆர்வலர் தேவராஜன் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த காட்சிகள் அரசுக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதால் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது தேசத்துரோக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகார் மனு மீது சென்னை போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.