close
Choose your channels

'புஷ்பா 2' படத்தில் ராஷ்மிகாவை அடுத்து இணைந்த பிரபல நடிகை..!

Tuesday, March 7, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்த ’புஷ்பா’ திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தில் சமந்தாவின் ஐட்டம் டான்ஸ் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ’புஷ்பா’ படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை அடுத்து இந்த படத்தின் இரண்டாவது பாகம் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இதில் முதல் பாகத்தில் நடித்த அல்லு அர்ஜுன், பஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்பட பல நடித்து வருகின்றனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் நடிகை சாய் பல்லவி இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் ஒரு முக்கிய கேரக்டரில் இந்த படத்தில் இணைந்துள்ளதாகவும் பத்து நாட்கள் அவர் இந்த படத்திற்காக கால்ஷீட் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் சாய் பல்லவி காட்சிகளின் படப்பிடிப்பு விரைவில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

சாய்பல்லவி இந்த படத்தில் இணைந்துள்ளதை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.