close
Choose your channels

நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு பிடிவாரண்ட்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு,..!

Friday, December 8, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

காமெடி நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு பிடிவாரண்டு உத்தரவு நீதிமன்றம் பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகின் காமெடி நடிகர்களில் ஒருவர் பவர்ஸ்டார் சீனிவாசன். மருத்துவரான இவர் 2010 ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானார். ’லத்திகா’ என்ற படத்தை தயாரித்து நடித்த பவர்ஸ்டார் சீனிவாசன் அதன் பிறகு சந்தானத்துடன் ஒரு சில படங்களில் இணைந்து நகைச்சுவை கேரக்டர்களில் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் 15 கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாக இறால் பண்ணை அதிபரை ஏமாற்றிய செக் மோசடி வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவர் மீது பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் அவர் இரண்டு முறை ஆஜராகாததை அடுத்து ராமநாதபுரம் மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். மேலும் அவரை அடுத்த ஆண்டு ஜனவரி 2ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய வேண்டும் என சென்னை அண்ணாநகர் போலீசாருக்கு நீதிபதி அறிவுறுத்தி உள்ளார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.