close
Choose your channels

சந்திக்க விரும்பிய ஆக்சன்கிங் அர்ஜூன்.. உடனே அப்பாயின்மெண்ட் கொடுத்த மோடி.. என்ன நடந்தது?

Saturday, January 20, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகம் வந்திருக்கும் பிரதமர் மோடியை சந்திக்க ஆக்சன் கிங் அர்ஜுன் அப்பாயின்மென்ட் கேட்ட நிலையில் உடனடியாக அவருக்கு அப்பாயிண்ட்மெண்ட் கிடைத்ததாகவும் இதனையடுத்து பிரதமர் மோடியை நடிகர் அர்ஜுன் சந்தித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் நடைபெற உள்ள கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைப்பதற்காக பிரதமரின் மோடி நேற்று சென்னை வந்தார். பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஆகியோர் கலந்து கொண்ட விழாவில் கேலோ இந்தியா நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டது.

இதனை அடுத்து பிரதமர் மோடி நேற்று இரவு கவர்னர் மாளிகையில் தங்கி இருந்தார். அப்போது பிரதமர் சென்னை வந்திருப்பதை அடுத்து ஆக்சன் கிங் அர்ஜுன் அவரை சந்திக்க விரும்புகிறதாக கூறப்பட்ட உடனே அவருக்கு அப்பாயின்மென்ட் கொடுக்கப்பட்டது. இதனை அடுத்து பிரதமர் மோடி - அர்ஜுன் சந்திப்பு நடந்ததாக தெரிகிறது.

பிரதமரின் சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களின் பேசிய அர்ஜூன் 'பிரதமரை என்னுடைய கோவிலுக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாகவும் விரைவில் வருகிறேன் என்று அவர் பதில் கூறியதாகவும் கூறினார். மேலும் இது ஒரு மரியாதை நிமித்த சந்திப்பு என்றும் பிரதமர் மோடி எங்களுக்கு பிடித்த ஒரு மனிதர், எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் அவரை பிடிக்கும், அவர் சென்னை வந்திருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து அப்பாயிண்ட்மெண்ட் கேட்டோம் உடனே அவரும் கொடுத்துவிட்டார் என்று கூறினார்.

இதனை அடுத்து நீங்கள் பாஜகவில் இணைய போகிறீர்களா? என்று கேட்ட கேள்விக்கு ’அப்படி எல்லாம் இல்லை, அரசியல் எனக்கு தெரியாது, இது ஒரு மரியாதை நிமித்த சந்திப்பு மட்டுமே’ என்றும் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.