close
Choose your channels

அப்பப்பப்பா போதும்ம்ம்ம்ம்பா! சூரப்பா குறித்து விவேக்கின் கவிதை

Saturday, April 7, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அப்பப்பப்பா போதும்ம்ம்ம்ம்பா! சூரப்பா குறித்து விவேக்கின் கவிதை

 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரிக்கை விடுத்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலையுறுத்தியும் கோலிவுட் திரையுலகினர் பலர் டுவிட்டரில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். அவர்களில் ஒருவர் நகைச்சுவை நடிகர் விவேக். இவர் தன்னுடைய கருத்துக்களை வேடிக்கையுடன் கூறி வருவதால் பெரும் வரவேற்பினை பெற்று வருகிறது

இந்த நிலையில் அண்ணா பல்கலைகழகத்திற்கு கன்னடரான சூரப்பாவை தமிழக ஆளுனர் நியமனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் கருத்துக்களை கூறி வரும் நிலையில் நடிகர் விவேக் தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து கவிதை ஒன்றை பதிவு செய்துள்ளார்.

நாங்கள் கேட்பது நீரப்பா!
நீங்கள் தருவதோ சூரப்பா!
அண்ணன் தம்பிகள் நாமப்பா!
நம்மைப் பிரிப்பது நீராப்பா?
அப்பப்பப்பா போதும்ம்ம்ம்ம்பா!
அன்னைக் காவிரி வேணும்ப்பா

விவேக்கின் இந்த கவிதைக்கு எதிர்ப்பும், ஆதரவும் மாறி மாறி கமெண்ட் பகுதியில் நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.