close
Choose your channels

ரஜினியை அடுத்து பாபாஜி குகையில் தியானம் செய்த தமிழ் நடிகை. வைரல் புகைப்படங்கள்..!

Sunday, September 24, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவ்வப்போது இமயமலை சென்று பாபாஜி குகையில் தியானம் செய்வார் என்பதும் அது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகும் என்பது தெரிந்ததே. இதையடுத்து தற்போது தமிழ் நடிகை ஒருவரும் பாபாஜி குகையில் தியானம் செய்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்த ’மீசையை முறுக்கு’ என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. இதனை அடுத்து அவர் ’கோடியில் ஒருவன்’ ’காட்டேரி’ ’கண்ணை நம்பாதே’ ’திருவின் குரல்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் சமூக வலைதளத்தில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஆத்மிகாவுக்கு இரண்டரை மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர். இவர் சற்றுமுன் இமயமலையில் உள்ள பாபாஜியின் குகையில் தியானம் செய்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

இந்த பயணம் ஆன்மாவின் அழைப்பு என்று கருதப்படுகிறது, ஒரு தெய்வீக அழைப்பு வந்தது, சிறிதும் யோசிக்காமல் நான் சென்றடைந்தேன். இது ஒரு கடினமான பயணமாகவும், மரண அனுபவத்தை எதிர்கொள்ளும் பயணமாகவும் இருந்தாலும் நல்ல விஷயங்கள் எளிதில் வராது.

நான் பாபாஜி குகையில் நுழைந்து தியானத்திற்கு உட்காரும்போது அந்த தியானம் ஆழமானதாக ஆரம்பிக்கப்பட்டது. என் வாழ்நாளில் இதற்கு முன் இதுபோன்ற சக்தியை நான் அனுபவித்ததில்லை. இந்த தியானத்திற்கு பிறகு எனது முழு பார்வையும் மாறியது. நிபந்தனை இன்றி அவரை நான் குருவாக ஏற்றுக் கொண்டேன்.இந்த உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் அவர்கள் எங்கிருந்தாலும் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது பாபாஜி குகைக்கு வந்து தியானம் செய்து அதன் அனுபவத்தை அனுபவிக்க வேண்டும். இவ்வாறு நடிகை ஆத்மிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.