close
Choose your channels

கமல்ஹாசனை கண்டனம் செய்துவிட்டு திடீரென பல்டி அடித்த கஸ்தூரி!

Monday, May 13, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்று அரவக்குறிச்சி தேர்தல் பிரச்சார மேடையில் கமல்ஹாசன் பல்வேறு கருத்துக்களை பேசினார். அதில் நாட்டின் வளர்ச்சி, தமிழகத்தின் வளர்ச்சி, குடி தண்ணீர் பிரச்சனை உள்பட பல விஷயங்கள் இருந்தும் ஊடகங்களும், சமூக வலைத்தளங்களும், திரையுலக பிரபலங்களும், அரசியல்வாதிகளும், அவர் பேசிய இந்து தீவிரவாதம் என்ற கருத்தை மட்டும் எடுத்துக்கொண்டு கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை கஸ்தூரி தனது பங்கிற்கு கமலின் இந்த பேச்சு குறித்து கூறியபோது, ' கமல்ஹாசனின் பல சிந்தனைகளுக்கு நான் பெரிய ஆதரவு என்றாலும் கூட்டத்தைத் திருப்திப்படுத்தும் அவரது பேச்சுகளுக்கு நான் என்றும் ஆதரவு கொடுப்பது இல்லை. பிரித்தாளும் அரசியல் நாடு முழுவதும் இருந்து வரும் நிலையில், கமல்ஹாசனின் நேர்மறை அரசியல் புத்துணர்வாக இருந்தது. ஆனால், அவரும் பெயர்களை வைத்துப் பேசி அரசியல் செய்யும் நிலைக்கு இறங்கிவிட்டது வருத்தமாக உள்ளது.

மதரீதியாக திருப்திப்படுத்துவதோடு ஏன் நின்றுவிட்டீர்கள்? சாதி அரசியலையும் எடுத்துக்கொள்ளுங்கள். இஸ்லாமியர்கள் இருக்கும் பகுதியில் இந்து தீவிரவாதம் பற்றி பேசும் கமல்ஹாசன் அப்படியே நாதுராம் கோட்சேவை பிராமணத் தீவிரவாதி என்று பேசி மற்ற குழுக்களின் ஓட்டுக்களையும் கேளுங்கள் என்று கூறியுள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் அதே கஸ்தூரி சிலமணி நேரங்கள் கழித்து கூறியபோது, 'நான் உள்பட பலர் கமல்ஹாசனின் நேற்றைய முழு பேச்சையும் கேட்காமல் அவரது 30 நொடி பேச்சை மட்டும் ஹைலைட் செய்து வருகின்றனர். எதிர்கால இந்தியா குறித்த அவரது திட்டங்கள் அபாரமானது. அவர் இந்துவோ, முஸ்லீமோ எந்த மதத்தையும் ஆதரித்தும் எதிர்த்தும் பேசவில்லை என்பது அவரது முழுமையான பேச்சை பார்த்தால் புரியும் என்று கஸ்தூரி திடீரென பல்டி அடித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.