close
Choose your channels

டிஜிபி சைலேந்திரபாபுவை சந்தித்து புகார் அளித்த குஷ்பு: காரணம் இதுதான்!

Tuesday, July 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பு இன்று டிஜிபி சைலேந்திரபாபு அவர்களை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்

நடிகை குஷ்புவின் டுவிட்டர் பக்கம் திடீரென மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டது என்பதும் அவரது ட்வீட்டுகள் அனைத்தும் அழிக்கப்பட்டு வேறொரு பெயரில் டுவிட்டர் பக்கத்தில் தோன்றி வருகிறது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இது குறித்து புகார் அளிக்க டிஜிபி சைலேந்திரபாபு அவர்களை நடிகை குஷ்பு இன்று சந்தித்துள்ளார். காவல்துறையின் நடவடிக்கையால் விரைவில் தனது டுவிட்டர் கணக்கு மீட்கப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்

இது குறித்து நடிகை குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியதாவது: ’எனது டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களாக நான் எனது கணக்கில் நுழைய முடியவில்லை. இது குறித்து புகார் அளித்துள்ளேன். ஆனால் துரதிஷ்டவசமாக அவர்கள் இன்னும் பதில் அளிக்கவில்லை

இந்த நிலையில் இன்று காலை எனது பெயருக்கு பதிலாக இன்னொருவர் பெயர் மற்றும் டிபி எனது டுவிட்டர் கணக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் எனது கணக்கை பயன்படுத்துகிறார் என தெரிகிறது. கடந்த மூன்று நாட்களில் எனது கணக்கில் ஏதேனும் செயல்பாடு இருந்தால் அதற்கு நான் பொறுப்பு அல்ல என்பதை தயவு செய்து அனைவரும் புரிந்து கொள்ளுங்கள். இந்த பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.