close
Choose your channels

ஆபத்தை துணிச்சலுடன் எதிர்நோக்கும் நயன்தாரா

Saturday, May 7, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக கோலிவுட் திரையுலகில் முன்னணியில் இருக்கும் நயன்தாராவின் அபரீதமான வளர்ச்சிக்கு அவருடைய தொழில்பக்திதான் காரணம் என்பதை கோலிவுட்டில் உள்ள பலர் அறிவார்கள்.


நயன்தாரா தான் நடிக்கும் கதாபாத்திரத்திற்காக எந்த அளவுக்கும் ரிஸ்க் எடுக்க தயங்க மாட்டார். சமீபத்தில் தனது ஒரிஜினல் தலைமுடியை ஒரு கேரக்டருக்காக கலர் மாற்றம் செய்தது உள்பட பல உதாரணங்களை கூறலாம்.

இந்நிலையில் தற்போது நயன்தாரா விக்ரம் நடிப்பில் ஆனந்த் சங்கர் இயக்கி வரும் 'இருமுகன்' படப்பிடிப்பில் உள்ளார். காஷ்மீரின் ஆபத்தான பள்ளத்தாக்கு பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பில் நயன்தாரா ரொம்பவே துணிச்சலாக நடித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

நயன்தாராவின் தைரியத்தை பார்த்துதான் படக்குழுவினர்களும் அந்த ஆபத்தான இடத்தில் துணிச்சலாக வேலை செய்ய தொடங்கியுள்ளர்களாம். மேலும் இந்த படத்தில் நயன்தாராவுக்கு சில ஆக்ஷன் காட்சிகளும் உள்ளதாகவும், இந்த காட்சிகளுக்காக அவர் முறையான பயிற்சி எடுத்த நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.