close
Choose your channels

துபாய் தொழிலதிபரை திருமணம் செய்யும் தமிழ் நடிகை.. நிச்சயதார்த்த புகைப்படங்கள் வைரல்..!

Wednesday, January 10, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரைப்பட நடிகை ஒருவர் துபாய் தொழிலதிபரை திருமணம் செய்ய உள்ள நிலையில் திருமணம் நிச்சயதார்த்தம் குறித்த புகைப்படங்கள் நடிகையின் சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழில் ’நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷிரின் காஞ்ச்வாலா. இவர் தற்போது அமீர் உடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பதும் மேலும் விமல் மற்றும் புகழ் ஆகியோர்களுடன் இரண்டு படங்கள் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை ஷிரின் காஞ்ச்வாலா, துபாய் தொழிலதிபர் அசார் என்பவரை திருமணம் செய்ய உள்ளார். கடந்த சில ஆண்டுகளாக இருவரும் நட்புடன் பழகிய நிலையில் அந்த நட்பு தற்போது காதலாக மாறி விட்டதாகவும், தனது நெருங்கிய உறவினரின் நண்பர் தான் அசார் என்றும் ஷிரின் காஞ்ச்வாலா தெரிவித்துள்ளார்.

தனது நிச்சயதார்த்தம் 5ஆம் தேதி மும்பையில் ஷிரின் காஞ்ச்வாலா - அசார் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. அசார் உடன் ஒரு புதிய வாழ்க்கையை தொடங்க ஆர்வத்துடன் காத்திருக்கிறேன், திருமணத்திற்கு பிறகும் நல்ல வாய்ப்புகள் கிடைத்தால் நடிப்பேன் என்று ஷிரின் காஞ்ச்வாலா கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.